கிருஷ்ணகிரி, ஜூன் 26 –
கிருஷ்ணகிரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வை துறை சார்பாக போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியானது, லண்டன் பேட்டை, பெங்களூர்ரோடு, காந்தி ரோடு, ராயக்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை வழியாக 2000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி மன நலமும் பாதிக்கப்படும்.
அவர்களை சார்ந்த குடும்பத்தினர்களும்.சமுதாயமும் பாதிக்கப்படுவதாகவும், இதனை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கைககளில் போதைப் பெருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, கலால் உதவி ஆணையாளர் பழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், கோட்ட ஆய அலுவலர் பிரதாப், ஓசூர் கோட்ட அலுவலர் கோவிந்தராஜ், குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ராஜவேல், மாவட்ட தொடர்பு அலுவலர் கண்ணியப்பன், என்.சி.சி அலுவலர் சக்கரதேவன் மற்றும் கிரிதரன், சுதாகர், மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


