தருமபுரி, ஏப்ரல் 20 –
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர், வகுத்தபட்டி, மெனசி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்: திமுக அரசின் 5 ஆண்டு ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூ. 3,500, கரும்பு டன் ரூ. 4,000 வழங்கப்படும். பால் கொள்முதல் விலை ஐந்து உயர்த்தி தரப்படும். மீட்டர் பொருத்தாமல் நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
கலைஞர் உரிமைத்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2,000 ஆக வழங்கப்படும். சத்துணவு காலை உணவு திட்டம் ஐந்தாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்றார். இந்த பிரச்சாரத்தின் போது ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளில் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



