சென்னை, ஜூன் 25 –
சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் ஏரிக்கரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் ஆனி மாதம் 10ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி சித்ரா நகூஸ்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இக்கோயிலானது 2009 ல், முதல் முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்று, 18 வருடங்களுக்குப் பிறகு இது இரண்டாவது கும்பாபிஷேகம் ஆகும். கோயிலின் சிறப்பானது நவவார கனி வாங்குவது, 5 பௌர்ணமிக்கு அம்பாளுக்கு மாலை அணிவிப்பது, மட்டை தேங்காய் வழிபாடு, நவராத்திரி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஆலய நிர்வாகி ராதா சேதுராமன் மற்றும் ஸ்ரீ நவசக்தி காமாட்சி அம்மன் கும்பாபிஷேக ஆலய விழா குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினார் சாமி அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.



