சுசீந்திரம், ஏப். 7 –
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் அரிய பெருமாள் விளைகாலனி சார்ந்தவர் பிரிட்டோ என்பவரது மகன் கிப்ஸன் ஜோஸ் (12) மற்றும் அதே பகுதியைச் சார்ந்த ஜெயஸ்ரீ ராஜன் என்பவரது மகன் ரோகித். இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்களும் கடந்த 6 ம் தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் உறவினர் வீடுகளில் சென்று விசாரித்தும் இரு மாணவர்களும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் தந்தையர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமரா மற்றும் மாணவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


