கிருஷ்ணகிரி,டிச.2- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசியுடன்,பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ ஆலோசனைப்படி, மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.வி.எஸ்.வி. மணி விஜயன் ஏற்பாட்டில் காவேரிப்பட்டினம் தாம்சன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருக்கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கழக செயலாளர் சி.தேங்காய் சுப்பிரமணி, பேரூராட்சி கழக பொறுப்பாளர் ஜெ.கே.எஸ். சாஜித், பேரூராட்சி தலைவர் அம்சவேணி, தொழிலதிபர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், ஓட்டுனர் அணி செந்தில்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் மாலனி மாதையன், சுற்றுச்சூழல் அணி பாரி, ஹரி நாராயணன், நாகராஜ், பாஸ்கர், கழக முன்னோடிகள் உள்பட பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.இதில் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தக அணியின் தலைவர், துணைத் தலைவர், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.



