கோவை, மே 12 –
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்தார். இதில் கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் மொத்த எண்ணிக்கை 284. வடக்கு 156, தெற்கு 128, மொத்தம் 284.
இதில் வடக்கு 48, தெற்கு 21 என 69 கடைகள் 15 நாட்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக 1557-1603-1846 மற்றும் 1662 ஆகிய 4 கடைகள் மூடப்பட்டு விட்டது. 1662 என்ற எண்ணுள்ள கடை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



