களியக்காவிளை, அக். 22 –
காரோடு முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டுள்ள தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு அமைக்க அப்பகுதியினர் கோரிக்கையை ஏற்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் தமிழக பகுதியான காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நடற்கர சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
இந்த தங்க நாற்கர சாலையில் அதங்கோடு பகுதியில் கோயிக்க தறை முதல் மடத்து விளை வரை ரோடு அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியை சுற்றிலும் சுமார் ஐந்நூறு வீடுகள் உள்ளன. மேலும் மடத்து விளையில் மிகவும் பழமையான அய்யா நாராயண சுவாமி திருநிழல் தாங்கல் கோயில் உள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு செல்ல இந்த வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதி வழியாக அப்பகுதியினர் தாமிரபரணி ஆற்று பகுதிக்கு செல்ல உள்ளனர். ஆகவே இந்த கோயிக்க தறை முதல் மடத்து குளம் வரை ரோடு அமைப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட கலக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இந்த பகுதியில் மிகவும் பழமையான மடத்துவிளை அய்யா நாராயண வைகுண்ட சுவாமி திருநிழல் தாங்கல் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல பக்க சாலை அமைக்க கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமார்க்கு மனு கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்மந்தப்பட்ட இடத்தை நேற்று எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்டதுடன் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி ரோடு அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு அமைக்கலாம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த ஆய்வில் அதங்கோடு காங். கமிட்டி தலைவர் பிரமில் பெலிஸ், இளைஞர் காங்.. தலைவர் பால் ஜெபசிங், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



