கிருஷ்ணகிரி, செப்.04.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளில் குருபூஜை, கீர்த்தனம், கலைநிகழ்ச்சிகள், துளசி பூஜை, சந்தியா ஆரத்தி, மகா அபிஷேகம், சொற்பொழிவு, உறியடி, மங்களாரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராதா-கிருஷ்ணர் சிலைகளை காவேரிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானமும், பிரசாத விநியோகமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இஸ்கான் தலைவர் H.G. சீனிவாச ஷிம் பிரபு தலைமையில், காவேரிப்பட்டினம் இஸ்கான் கிளை H.G. அனுத்தம கிருபதாஸ் முன்னிலையில், ஓசூர் இஸ்கான் தலைவர் சீனிவாச சியாமதாஸ் மற்றும் காவேரிப்பட்டினம் இஸ்கான் ஆலய பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.



