தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் தியாகராயநகர் தொகுதியில் வடகிழக்கு பருவ மழை 2026 முன்னெச்சரிக்கை நடவடிகைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெருநகரச் சென்னை மாநகராட்சி 10வது மண்டல அதிகாரிகள், அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்திப் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



