நாகர்கோவில், ஜுலை 15 –
காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு நிறுவனர் முத்துக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர் இராமசுவாமி பிள்ளை, செய்தி தொடர்பாளர் ராதா கிருஷ்ணன், குழந்தைசாமி, வழக்கறிஞர் தெய்வ ராஜன், வர்க்கீஸ், ராஜன் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட நிர்வாகி முத்துக்குமார் கூறுகையில்: காமராஜர் ஆட்சியின் புகழ் ஆண்டாண்டுக்கு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இன்றி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை பீடத்தில் நின்று மலர் அணிவித்து மரியாதை செலுத்த கூடிய போதிய இடம் இல்லை. இச்சிலையை வேப்பமூட்டில் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சியை மேற்கொண்ட வக்கீல் இராதாகிருஷ்ணன் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி சிலை பீடத்தின் அகலத்தை பெரிதாக்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.