ஆக-04:தேனி-மதுரை செல்லும் சாலையில் நாய் ஒன்று துர்நாற்றம் வீசிய நிலையில் இறந்து கிடந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் நடைபயிற்சி சென்ற ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் வீடு திரும்பும் போது, அனைவருக்கும் இடையூறாக இறந்து கிடந்த நாயை மண்வெட்டியால் குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினார். அப்பகுதியில் துர்நாற்றம் வீசாதபடி இடத்தை துப்புரவு செய்தார். தொடர்ந்து இதுபோன்ற சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர் ரஞ்சித்குமார் அவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.



