திண்டுக்கல்லில்
மெர்சி ஃபவுண்டேஷன், அனுகிரகா கல்லூரி, தாய்கூடு பவுண்டேஷன் ஆகியவை இணைந்து திருநங்கையர் தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியில் அனுகிரகா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த அரசு மருத்துவராக தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் பல்வேறு சாதனைகளை புரிந்து அனைவராலும் பாராட்டு பெற்ற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் பேராசிரியர் Dr. T.சுரேஷ்பாபு அவர்களுக்கு மெர்சி ஃபவுண்டேஷன் நிறுவனர் முனைவர் S.மெர்சி செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி சிறந்த மருத்துவருக்கான விருதினை வழங்கினார்.அருகில் தாய்கூடு பவுண்டேஷன் நிறுவனர் Ln. Dr.S.குணவதி உள்ளார்.



