திருப்பூர், செப்டம்பர் 3 –
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 4ல் உள்ள 36-வது வார்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2025-26 இன் கீழ் வார்டு எண் 36 க்கு உட்பட்ட சூசையபுரம் கிழக்கு, வடக்கு, மிலிட்டரி காலனி, சின்னா நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரீட் தளம் மறு சீரமைக்கும் பணி துவக்க விழாவினை திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
உடன் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜ், வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் பி.ஆர். செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி நந்தகோபால், மியாமி அய்யப்பன், மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் திவாகரன், இளம் பொறியாளர் சுப்பையா, மாவட்ட துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர், 36-வது வட்டக் கழக திமுக செயலாளர்கள் பி.எஸ். பாண்டியன், தினேஷ் குமார், பிரதிநிதிகள் சுதாகர், கிருஷ்ண மூர்த்தி, இளைஞர் அணி நிர்வாகிகள் குட்டி பாய், ஏக்நாத், ஜெய் கிரி, துரை, அண்ணா துரை, தம்பி நாராயணன், நோயல் ததேயு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.



