திருப்பூர், ஜூன் 9 –
திருப்பூர் கூத்தம்பாளையத்தில் தனக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு இருந்த நபர் ஒரு வருடத்திற்கு மேலாக வாடகை தராமலும், சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் கிளப் நடத்தியும், சேவல் சண்டைக்கு சேவல்களை வளர்த்தும் தினமும் மது பிரியர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியதால் தனதுகட்டிடத்தை காலி செய்ய உரிமையாளர் கேட்டபோது கொலை மிரட்டல் –
வாடகைக்கு இருக்கும் நபரிடமிருந்து தனக்கு சொந்தமான கட்டிடத்தை மீட்டுத் தரக்கோரி போலீஸாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீட்டின் உரிமையாளர், அவரது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கட்டிடத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம். பரபரப்பு.
திருப்பூர் அருகே கூத்தம்பாளையம் பகுதியில் ஆனந்த் – பாக்கியலட்சுமி ஆகிய தம்பதியினருக்கு சொந்தமான ஐந்தரை சென்ட் இடத்தில் தார்சு கட்டிடத்தை பாலமுருகன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார், இவர் இந்த கட்டிடத்தில் பனியன் வேஸ்ட் வியாபாரம் செய்வதாக கூறிக்கொண்டு அதில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் கிளப் நடத்தியும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் அதிக அளவில் வந்து செல்வதும்,சேவல் சண்டைக்கு பயன்படுத்தும் கோழிகள் வளர்ப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார், மேலும் கடந்த ஒரு வருட காலமாக வாடகை பணமும் தருவதில்லை கட்டிடத்திற்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையும் கழிந்து விட்டது இதனை கேட்கச் சென்ற வீட்டு கட்டிடத்தின் உரிமையாளர் பாக்கியலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார் ,
இதனால் பாதிக்கப்பட்ட ஆனந்த் பாக்கியலட்சுமி தம்பதியினர் தங்களது வீட்டை மீட்டு தர கோரி
திருமுருகன்பூண்டி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து 3 மாத கால அவகாசம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். இதனை ஏற்ற ஆனந்த் குடும்பத்தினர் கால அவகாசம் கொடுத்து காத்திருந்தனர். ஆனால் வாடகைதாரர் ஆன பாலமுருகன் வீட்டை காலி செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த் மீண்டும் காவல்துறையை அணுகும் பொழுது காவல்துறையினர் புகார் கொடுத்த ஆனந்துக்கு எதிராகவும் பாலமுருகனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.
இந்நிலையில் வீட்டு பத்திரத்தை வைத்து 10 லட்ச ரூபாய் கடன் பெற்ற தனியார் நிதி நிறுவனம் இந்த கட்டிடத்தை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த்,பாக்கியலட்சுமி ஆகியோர் தனது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டவர்களுடன் கட்டிடத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் பாதிக்கப்பட்ட ஆனந்த் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: தங்களது கட்டிடத்தில் பாலமுருகன் என்பவர் பனியன் கம்பெனி வைப்பதற்கு என்று கூறி விட்டு அங்கு சீட்டாட்டம் சேவல் சண்டை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் வாடகையை கேட்கும் பொழுது கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் காவல்துறையினர் பாலமுருகனுக்கு சாதகமாக பேசி தங்களது சொத்தை பாலமுருகன் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதற்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் அருகே கூத்தம்பாளையம் பகுதியில் சொந்த இடத்தை மீட்டு தர கோரி தனது உறவினர்களுடன் கணவன் மனைவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



