பெருமாநல்லூர், ஆக. 30 –
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இன்று (30.08.2025) திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகங்களை வழங்கினார்கள். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ஜெயந்தி, முதல்வர், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மரு. மனோன்மணி, மரு. கலைச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.



