கோவை, செப். 30 –
கோவை நீலாம்பூர் அடுத்த செரயாம்பாளையம் பகுதியில் உண்ணாமலை புரமோட்டார்ஸ் சார்பில் “கார்த்திபுரம்” என்ற புதிய நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவையை சார்ந்த தங்கநகை வர்த்தகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரைப்பட பிண்ணனி பாடகர்கள் சஞ்சனா, நிவாஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உண்ணாமலை புர மோட்டார்ஸ் நிறுவனர் பி கார்த்திகேயன், இயக்குனர் நவீன் மற்றும் கோவையை சார்ந்த தொழிலதிபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



