திருப்பூர், மே 5 –
தமிழகம் முழுதும் த.வெ.க. வீசிய அலையால், அமைச்சர் பலர் தோல்வியை சந்தித்தனர். காங்கயம் தொகுதியில் போட்டியிட்ட செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதி அமைச்சர் தொகுதி என்பதால் வி.ஐ.பி தொகுதியாக கருதப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜ் போட்டியிட்ட நிலையில், சிட்டிங் அமைச்சர் சாமிநாதனுக்கு மீண்டும் சீட்
வழங்கியது.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் நடராஜ் 70 ஆயிரத்து 753 ஓட்டுக்கள் வெற்றி பெற்றார். த.வெ.க. வேட்பாளர் மணிக்கவுண்டர் 62 ஆயிரத்து 815 ஓட்டுக்களை பெற்று இரண்டாமிடம் பிடித்தார். சிட்டிங் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் 58 ஆயிரத்து 931 ஓட்டுக்களை பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
முதலிடம் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளரை விட 6,983 ஓட்டுக்கள் குறைவாக பெற்றதால், த.வெ.க. இரண்டாமிடம் பெற்றது. 58,931 ஓட்டுக்கள் தி.மு.க. மூன்றாமிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



