கன்னியாகுமரி, ஜன. 21 –
கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி, ஜோசப்புரம் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வன் மகன் சோனி (26). மீன்வளத்துறையில் சாகர் மித்ரா பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி நிமித்தமாக கோவளம் செல்ல வேண்டி அவரது பைக்கில் புறப்பட்டார்.
பைக் மகாதானபுரம் ரவுண்டானா – கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் சாலையில் செல்லும் போது, சிலுவை நகர் பகுதியில் பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சோனி படுகாயம் அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீசார் டாரஸ் லாரியை வேகமாக ஓட்டி வந்து ஏற்படுத்தியதாக தோவாளை பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


