மார்த்தாண்டம், ஜன. 6 –
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தாமஸ் மகன் சச்சின் (22) மற்றும் அவரது நண்பர் ஜேக்கப் குரியகோஸ் (21) மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இன்று அதிகாலை தனது நண்பர்கள் இருவரும் பைக்கில் குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி வேலை விஷயமாக சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஜேக்கப் குரியகோஸ் ஒட்டி வந்துள்ளார்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வரும்போது எதிரே வந்த கனரக வாகனம் ஒன்று பைக்கில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ஜேக்கப் குரியகோஸ், சச்சின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து இரண்டு பேரும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தை தேடி வருகின்றனர்.


