தென்காசி, ஜூலை 3 –
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களில் பாஜக நகர் மன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தென்காசி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன 33 வார்டுகளிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். மக்களின் தேவைகளை நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறும் போது நகராட்சி அதிகாரிகள் மேலிட உத்தரவு என்று கூறி பணி செய்ய மறுக்கிறார்கள். இது மக்கள் விரோத செயல் என்றும் உள்ளாட்சி சட்டப்படி தன்னாட்சி அதிகாரம் உள்ள மக்கள் அடிப்படைத் தேவையை மன்றத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி செயல்படுத்த எந்த அரசும், அதிகாரிகளும் தடுக்க முடியாது மீறி மேலிட உத்தரவு என்று கூறி மக்களின் தேவையை தடுத்து நிறுத்தி நிராகரித்தால் மக்கள் நலம் விரும்பும் நகர்மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அரசு நிர்வாகம் செயல்பட தேவையான மன்ற பொருள்கள் கோப்புகள் மன்ற அனுமதிக்கு வந்தால் அதை நிராகரிப்போம் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
பாஜக நகர்மன்ற உறுப்பினர்களை தவிர இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற கட்சிகளை சேர்ந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.



