By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Last updated: February 11, 2026 8:25 pm
February 11, 2026
62 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப். 11 –

கன்னியாகுமரி ரதவீதியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் என்ற கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உள் பகுதியில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கன்னியம்பலம் 4 பக்கமும் திறந்த வெளியாக காணப்படும். இதனால் பகவதி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் கன்னியம்பலத்துக்கு சென்று இளைப்பாறி வந்தனர்.

காலப்போக்கில் வியாபார நோக்கில் கன்னியம்பலத்தை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் கன்னியம்பலத்தின் 3 பக்கங்களும் அடைக்கப்பட்டு,அதனை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இதனால்
பக்தர்களுக்கு பயன்பட்டு வந்த கன்னியம்பலம் மூடப்பட்டது. இந்த நிலையில் பழமை வாய்ந்த கன்னியம்பலம், மண்டபத்தை பாதுகாக்க வேண்டியும் புராதனமான இந்த மண்டபத்தை வியாபார ஸ்தலமாக மாற்றக்கூடாது என்றும் இந்த மண்டபத்தில் இருக்கின்ற அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடை களை இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தர விட்டார்.

இதை தொடர்ந்து கடந்த மாதம் மண்டபத்தை மறைத்து கட்டப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் கடை கன்னியாகுமரி நகராட்சி மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கான அத்தாட்சிகள்’ மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் மண்டபத்தில் உள்ள மற்ற 12 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு அறிவுரை வழங்கியது. இதைத் தொடர்ந்து கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியது. நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு

இதை கருத்தில் கொண்டு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சிராணி,பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றவும், கடைகளுக்கு சீல் வைக்கவும் முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் திரண்டு கன்னியம்பலம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளுக்குள் இருந்தவாறு சீல் வைக்க முடியாதபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலா தலமான கன்னியாகுமரி பரபரப்பாக காணப்படுகிறது. சன்னதி தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடையடைப்பின் காரணமாக கன்னியாகுமரி சன்னதி தெரு, பார்க்வியூ பஜார், காந்தி மண்டப பஜார், விவேகானந்தா ராக் ரோடு, மெயின் ரோடு, ரத வீதி உள்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா
பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா

February 16, 2025
94 Views
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி செயற்குழு
டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா
திருவட்டார் : மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account