சென்னை, ஜூலை 27 –
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், 880 மாணவ விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு (Sports Quota) சான்றிதழ்களை வழங்கியும் உயர்தர விளையாட்டு பயிற்சியையும் கல்விசார் முன்னேற்றத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். விளையாட்டு விடுதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் &ஆதவ் அர்ஜுனா விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்களை வழங்கி, எஸ்.ஆர்.எம். விளையாட்டு விடுதியை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர், நிர்வாக இணைவேந்தர் ரவி பச்சமுத்து, கல்வி இணைவேந்தர் பி. சத்யநாராயணன், அறங்காவலர் மற்றும் எஸ். பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். தியாகராஜன் பி. விஜயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர் கூறியதாவது: “எங்களது 880 மாணவர்கள் இன்று விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்களை பெறுவது, ஒட்டுமொத்த எஸ்.ஆர்.எம். குடும்பத்திற்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும். விளையாட்டிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவதற்காக, மாணவர்கள் ஆதவ் அர்ஜுனா அறிவைப் பெறும் ஆர்வம், உறுதியான மனப்பாங்கு மற்றும் விடாமுயற்சியிலிருந்து ஊக்கமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில், “இளம் வயதிலிருந்தே விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டினார்.
8 முதல் 18 வயதுக்குள் உள்ள இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து, மாணவகள் வெற்றி பெற தேவையான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதே மாநில அரசின் நோக்கமாகும். குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி, உயர்கல்வியையும் விளையாட்டையும் ஒருசேர தொடரும் வாய்ப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்ற கல்வி நிறுவனங்களுக்கு திகழ்கிறது. இதுபோன்ற முயற்சிகள் இந்திய விளையாட்டுத் துறையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் பெரிதும் உதவுகின்றன.” என்று பேசினார்.



