தஞ்சாவூர், ஜூலை 3 –
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் நூல் வெளி யீட்டு விழாவும் 2025 சாகித் அகாடமி விருது பெற்றதற்க்கான பாராட்டு விழாவும் தஞ்சாவூர் பெசன்ட் லாட்ஜில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருக சரவணன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சைதா பாலா, மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சத்திய நாதன் அனைவரையும் வரவேற்றார். தொடக்க உரையாக மாநில பொது செயலாளர் எழுத்தாளர் களப்பிரன் நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் இடது குரல் நூலை வெளியிட்டார். முதல் நூலிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பெற்றுக்கொண்டார்.
தமிழ்ச்செல்வன் எழுதிய நூல்களான திருப்பி அடித்த வரலாறு அறிமுகத்தினை மேனாள் முதல்வர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டாக்டர் மருதுதுரையும், தமிழ் சிறுகதையில் 50 ஆண்டு கால தடயங்கள் என்ற நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி நூலை அறிமுகப்படுத்தி பேசினார்.
வாழ்த்துரையாக தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, பாரதி கல்வி குழுமம் செயலாளர் புனித கணேசன், பாம்பே ஸ்விஸ் சுப்பிரமணிய சர்மா, வெற்றி தமிழர் பேரவை செழியன், மாநில செயற்குழு வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாக எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசினார். நிறைவாக மாநகர செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.



