ஈரோடு, மார்ச் 17 –
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரில் நடந்த வாகன சோதனையில் 53, 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணம் இன்றி இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதால் அவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கோபி பழனி கவுண்டன் புதூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் சத்தியமாங்கலத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி மோகன் பிரசாத் என்பவர் கொண்டு சென்ற ரூ 60 ஆயிரம் அத்தாணியில் இருந்து காங்கயத்திற்கு பரமசிவம் என்பவர் கொண்டு சென்ற 51 ஆயிரத்து 710 கோபியை அடுத்த கொடிவேரி கொங்குநாடு வழியாக வந்த பங்களா புதூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் கொண்டு சென்ற ஒரு 60 ஆயிரம் ஆகியவற்றையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொய்யல் சோதனை சாவடியில் அடுத்தடுத்து வந்த இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 2,13,000 மற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 190 ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர் வரட்டு பள்ளம் சோதனை சாவடி அருகே நாகேஷ் என்பவர் கொண்டு சென்ற ஒரு லட்சத்தையும் அம்மாப்பேட்டையை அடுத்த சின்ன பள்ளம் சோதனைச்சாவடி அருகே நடந்த வாகன சோதனையில் சந்தோஷ் என்பவர் கொண்டு சென்ற ஒரு லட்சம் பவானி ஜம்பையில் நடந்த வாகன சோதனையில் சூர்யா என்பவர் கொண்டு சென்ற ரூ.59 ஆயிரத்து 630, சந்தோஷ் குமார் என்பவர் கொண்டு சென்ற ரூ. ஒரு லட்சம் காஞ்சிக் கோவில் பகுதியில் வெங்காய வியாபாரி கந்தசாமி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ரூ.11 லட்சத்து 98 ஆயிரத்து 730 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


