ஈரோடு, பிப். 19 –
ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் (AESL) நிறுவனத்தின் 6 மாணவர்கள் JEE மெயின் 2026 தேர்வில் (செஷன் 1) சாதனை படைத்துள்ளனர்.
பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்ட தேசிய தேர்வு முகமையின் (NTA) முடிவுகளின்படி, ஆகாஷ் இன்ஸ்டிடியூட் ஈரோடு மாணவர்கள் 6 ஜேஇஇ மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று உள்ளனர். சஞ்சய் 99.77 பர்சன்டைல்களுடன் முதலிடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து அதியன் ஆர் 98.53, நிகில் சிவானந்தன் 98.46, ராகுல் எஸ் 98.41, ஆராதனா விக்னேஷ் 98.05, அபினவ் கே 98.01 பர்சன்டைல்கள் பெற்றனர்.
AESL இன் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா மற்றும் AESL அதிகாரிகள் குடே சஞ்சய் காந்தி, பிரதீப் உன்னிகிருஷ்ணன் மற்றும் கோபிநாத் ஆகியோர் கூறியதாவது: எங்கள் சென்னையைச் சேர்ந்த மாணவர் அஜய் (99.99 சதவீதம்) பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றார். இது ஆகாஷ் கல்வி முறையின் வலிமைக்கு ஒரு சான்றாகும்.
AESL நாட்டில் 400க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் 9 மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
NIT மற்றும் IIIT இல் சேர்க்கை பெறுவதற்காக நாட்டில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் JEE தேர்வை எழுதினர். உலகிலேயே கடினமான தேர்வான JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றவர்கள் IIT இல் சேர்க்கை பெறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.



