நாகர்கோவில், ஜூன் 23 –
சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் தனுஷ் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும், உண்மை தன்மையை ஆராயாமல் சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருவதால் உண்மை நிலை மறைக்க முயல்வதாகவும் காவல்துறை தன்னுடைய கடமையை சரிவர செய்து வருவதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கம் பின்வருமாறு :
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட செருப்பாலூர் காவுவிளை காலணி பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் தனுஷ் (22) காவஸ்தலத்தில் உள்ள தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் 19.06.2025 அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் தந்தை துரைசாமி (49) கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பல செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் இறப்பு தொடர்பாக பல்வேறு யூகங்களையும் சந்தேகங்களையும் பல கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் உண்மை நிலை என்னவென்றால் சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையிலும் சாட்சிகள் விசாரணையிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற விசாரணையிலும் இறந்து போன தனுஷ் என்பவரும் குலசேகரம் காவஸ்தலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்ததுள்ளனர். இடையில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இளைஞர் மீண்டும் காதலைத் தொடர முயற்சி செய்துள்ளார். அதனை அந்த பெண் நிராகரித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் 20.06.2025 இறந்து போன நபரின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையிலும் உடற்கூறு பரிசோதனை அடிப்படையிலும் இளைஞரின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது. இது தொடர்பாக தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே இளைஞரின் இறப்பு தொடர்பாக எவரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.