தமிழகத்தில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 6ம் தேதி திங்கள் கிழமை வெளியான நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92:28% சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி ஆட்சியர் அலுவலக கூட்டுறங்கில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்லூரி கனவு நிகழ்ச்சியை நடத்துவது குறித்து அதன் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உதவி இயக்குனர் தொழிற் பயிற்சி நிலையம் பாபு கல்லூரி கனவுகள் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுகாசினி ஓம் பிரகாஷ் மற்றும் துணை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி அலுவலர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்



