தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலக முன்பு தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும். என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



