இரணியல், பிப். 2 –
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை அருகே உள்ள ஓமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்ட்றோ (32). இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் இரணியல் அருகே உள்ள ஒரு கட்டிட காண்ட்ராக்டரிடம் ஜேசிபி ஓட்டுனர் ஆக நான்கு ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.
நுள்ளிவிளை பகுதியில் தங்கி இருந்த ஆண்றோ இன்று காலை திங்கள் நகரில் இறைச்சி வாங்கி விட்டு இரணியல் அருகே உள்ள ஆமத்தான் பொத்தை அருகே உள்ள ஒரு ஆபத்தான வளைவில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதி தலையில் பலத்த காயமடைந்து ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் ஆட்டோவை ஓட்டி வந்த தலக்குளம் மேலத்தெரு பகுதியில் சேர்ந்த நாராயணன் (30) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



