புதுக்கடை, ஜன. 27 –
புதுக்கடை அருகே இனயம் கிழக்குத் தெரு, 5-ம் அன்பியத்தை சேர்ந்தவர் மினிஸ்டன் (33). நேற்று அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் எதிரில் மினிஸ்டன் உறவினர்களான ஜெரின் (30), ரெஜி (34), ஜான் பிரிட்டோ (36) ஆகியோர் மது அருந்திக் கொன்டு இருந்தனர். அவர்களிடம் மினிஸ்டன் சென்று நலம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் நீ எப்படி எங்களிடம் நலம் விசாரிக்கலாம் என கேட்டு போதையில் மினிஸ்டனை தாக்கியுள்ளனர்.
இதை அறிந்த மினிஸ்டனின் அத்தை புஷ்ப மேரி (49) என்பவர் சமாதானம் செய்ய அங்கு சென்றுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் ஜெரின், ரெஜி, புஷ்பமேரி மற்றும் மினிஸ்டன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


