சிவகங்கை, செப். 25 –
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை. இதுகுறித்து கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காடனேரி பஞ்சாயத்து கிளார்க் மற்றும் பி.டி.ஓ போன்ற உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில்: எங்கள் ஊர் காடனேரி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாகனேரி கிராமத்திற்கு சென்று தண்ணீர் தூக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து காடனேரி பஞ்சாயத்து கிளார்க் மற்றும் பி.டி.ஓ போன்ற துறை சார்ந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் பதவி வைக்கும் போது எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
ஆனால் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்து அரசு அலுவலர்களின் பொறுப்பில் சென்றவுடன் பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவித்தும் அலட்சியமாக இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்தி காடனேரி கிராமத்தின் குடிதண்ணீர்ப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அண்ணா கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



