புதுக்கடை, செப். 15 –
புதுக்கடை அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் அம்மாளு (72) என்பவர் மகன் தர்மராஜ் (50). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. கடந்த தினம் இவர் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் தர்மராஜ் மூளமூட்டு கடவு ஆற்றின் ஓரத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கூறினர்.
உடனடியாக இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று பிணத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெளியூருக்கு வேலைக்கு சென்ற தர்மராஜ் எப்படி இறந்தார்? என புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


