ஈரோடு செப் 28
ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. விழாவிற்கு சங்க மாநில புரவலரும் மாவட்ட கௌரவ ஆலோசகருமான கே கே பாலுசாமி தலைமை தாங்குகிறார். சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால் வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் சோழா ஆசைத் தம்பி முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறுகிறார்.
விழாவில் ஜெ.சுத்தானந்தன், ஆர்.ஏ.என்.முத்துசாமி, கொடி காத்த தியாகி குமரன், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சங்கத்தின் மாநில தலைவர் கே பி கே செல்வராஜ் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசுகிறார். மேலும் விழாவில் சமுதாய சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா , 17ஆம் நூற்றாண்டில் ஈரோட்டை ஆண்ட மன்னர் சந்திரமதி முதலியார் உருவப்படம் வெளியிட்டு விழா, சங்கத்தின் 41 ஆம் ஆண்டு விழா, போன்ற ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.
முன்னதாக காலை 10 மணிக்கு சிலம்பு, துடும்பு ஆட்டங்கள், வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட தலைவர், என். நந்தகோபால், செயலாளர் சோழா எம் ஆசைத்தம்பி ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.



