தென்காசி, செப். 01 –
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்முத்தையா பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாவீரர் பூலித்தேவன் திருவருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.



