மார்த்தாண்டம், மே 2 –
குமரி மலையோர கிராமமான பத்து காணி பத்து பகுதியில் ஆறுகாணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த ஒரு முதியவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 50 மதிப்புடைய 124 லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6,200 ஆகும்.
உடனே அவரை கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்த போது, கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். உடனே அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


