மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறையில் கடந்த 25 ஆம் தேதி அப்பா என்கிற வாசகத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட சென்ற பா.ஜ.க. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன்,காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டார்கள். இதனை அடுத்து கடலூர் சிறையில் இருந்து விடுதலை ஆன மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்டோருக்கு. மயிலாடுதுறையில் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில பொது குழு உறுப்பினர் கோவி சேதுராமன், வழக்கறிஞர்கள் கபிலன், பாரதி கண்ணன், விஜயபிரபாகரன், மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் வாஞ்சிநாதன், பிரபாகரன், குரு சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.



