கன்னியாகுமரி, செப். 17 –
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி அருகே கடலோர காவல்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2350 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்ட ஓட்டுநர் மற்றொருவர் என 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனர்.



