கோவை, ஜூன் 10 –
பொள்ளாச்சி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆச்சிபட்டி ஊராட்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் வழங்கினர்.
கமலமுத்து நகர் அரசு பள்ளி மற்றும் ஆ.சங்கம்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் மழை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆச்சிபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கழக நிர்வாகி முருகேசன் முத்துலட்சுமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வைத்தார். நகர செயலாளர்கள் அக்குபாய், தங்கராஜ், தர்மராஜ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் வெங்கடசலம், சரஸ்வதி, அருண் ஹரி ஹரன், அபினவ் சூர்யா, முகமது ஆசிம், சூர்யா, விமல் ஆதித்யா, கனிஷ், காளிதாஸ், சுதர்ஸா, சந்திர கலா, லதா, சாய் மீனா, வெங்கடேஷ், சூர்யா, பிரியா, வினோத், ஸ்டிபன், முருகேசன், மோகனன் ஆகிய கழக நிர்வாகிகளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



