மதுரை, ஜூலை 7 –
மதுரை அலங்காநல்லூரில் அண்ணாமலையின் we the leaders இயக்கம் சார்பில் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானமாக சோழவந்தான் தொகுதி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் தொண்டர்கள் இணைந்து மாபெறும் பேரணி நடத்துவது எனவும் பேரணியை அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் பேசியதாவது: we The Leaders சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொகுதி சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக மாபெறும் பேரணி நடத்த உள்ளதாகவும், அதில் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளதாகவும், இயக்கம் விரைவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து மாபெரும் பெரிய இயக்கமாக மாறும், விரைவில் இந்த இயக்கம் கட்சியாக தமிழகத்தில் உருவெடுக்கும், கட்சி சின்னம், கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அண்ணாமலை கட்சி ஆரம்பித்தவுடன் தமிழக அரசியல் சூடு பிடிக்கும், தவெக வுக்கும் அண்ணாமலைக்கும் தான் தமிழகத்தில் போட்டியே இருக்கும், மற்ற கட்சிகள் சிதறி சின்னாபின்னமாகி விடும், தவெக அரசு 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிடுவது குறித்து யோசிப்போம் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போனால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்று பல்வேறு பதவிகள், பெறுவோம், அண்ணாமலை கட்சி பிரவேசம் நிச்சயம். தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி தமிழக மக்கள் அண்ணாமலைக்கு முழு ஆதரவு தருவார்கள் என பேசினார்.



