கன்னியாகுமரி நவ 22
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பள்ளம் துறை புனித மத்தேயு ஆலயத்தில் பங்கு தந்தை சகாய ஆன்றனி தலைமையில் நேற்று காலை 6.30 மணி அளவில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மீனவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கும், மீன்பிடி உபகரணங்களுக்கு பங்கு தந்தை மந்திரிப்பு செய்து புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கடலில் மலர்களை தூவியும் தீபம் ஏந்தியும் மந்திரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கி மீனவர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளம்துறை கடற்கரையில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics