திருப்பத்தூர்: மார்ச்:9, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவானது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய செயலாளர்
செண்பகவள்ளி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பொறுப்புகள் பாலசுப்பிரமணியன், கணபதி,சங்கர், ஆம்ஸ்ட்ராங், விமல் ராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும் தனியார் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கவிதை,கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி,நடனம், மௌன நாடகம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 250 தன்னார்வலர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மகளிர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டார அறிவியல் இயக்கம் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முன்னாள் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாதன், சிவக்குமார், தங்கம்,பூபதி, சுதாகர்,சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பரதம், நாட்டுப்புற கிராமிய பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.