திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டு கங்காநகரில் வார்டு
கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஏற்பாட்டில், ஊர்
பொதுமக்கள் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்
ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் முதற்கட்டமாக 19 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் தொடக்க
விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தலைமை தாங்கினார். அனுப்பர்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன்,
நண்பர்கள் குழுவை சேர்ந்த அன்பரசன், ரமேஷ், கதிரவன்,
செல்வம், அருணாச்சலம், ஈஸ்வரன், ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்திபேசினார்கள். இதில் 2-வது மண்டல தலைவர் தம்பி
கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,
கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் பேசும்போது, ஒரு
கண்காணிப்பு கேமரா என்பது ஒரு போலீசாருக்கு சமம்
என்றார். 2-வது கட்டமாக மேலும் 13 கேமராக்கள் அந்த
பகுதியில் பொருத்தப்பட உள்ளன என்று கவுன்சிலர்
தெரிவித்தார். இதில் தி.மு.க.வார்டு செயலாளர் வெள்ளைச்சாமி,
நண்பர்கள் குழு உறுப்பினர்கள் சரவணன், கோபால், சம்பத்,சுபாஷ், நாகராஜ், கணேசமூர்த்தி, கணேஷ், பாலு, ஜீவானந்தம், முனுசாமி, தங்கராஜ், கோபி,காளீஸ்வரன், அருண்குமார்,தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.