சேலம் மாவட்டம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்.ஆகவே, பொது மக்களின் தண்ணீர் தாகத்தை போக்க அதிமுக சார்பில் நீர் மோர் ஆங்காங்கே மக்கள் கூடும் இடத்தில் திறக்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம். ராஜமுத்து MLA தலைமையில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் ,கம்மங்கூழ், தர்ப்பூசணிபழம், வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட அனைத்தையும் வழங்கினார். உடன் வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் S . வரதராஜ், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ பிரகாஷ், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், இளம்பிள்ளை பேரூர் செயலாளர் கிருஷ்ணன், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணன்,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சௌந்தர்ராஜன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பழனிசாமி, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கமலா கருப்பணன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பனமரத்துப்பட்டி S. அருண்குமார் B.E மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.