விழுப்புரம், நவம்பர் 13 –
விழுப்புரத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி விழுப்புரம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 17.27 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுக்கு 87 சதவீதம் அளவிற்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 13 சதவீதம் வீட்டில் ஆட்கள் இல்லாத சூழல் உள்ளிட்ட நிலையில் அலுவலர்கள் வீட்டிற்கு மூன்று முறை செல்வார்கள். விண்ணப்பங்களை பூர்த்தி 1970 வாக்காளத் பதிவு அலுவலர், உதவி அலுவலர்கள் பணியில் உள்ளனர். 2002-2025 இந்த இரண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர் உள்ளவர்கள் யார் என்று அறிந்து அந்த வாக்காளர்களுக்கு பதிவு செய்ய வாக்குச்சாடி அலுவலர்கள் உதவி செய்த வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கடந்த இரண்டு நாட்களக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெரும் பணி நடைபெற்ற வருகிறது. தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40ஆயிரம் படிவங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றின் 33 ஆயிரம் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களின் 50 படிவங்களை பெற்று வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு சென்று படிவங்களை பெற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி செந்தில்வடிவு உட்பட பலர் உள்ளனர்.



