நாகர்கோவில் ஜூலை 21
குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை தடுக்கும் வகையில் அவர்கள் பெட்ரோல் பல்கிற்கு வந்தால் பெட்ரோல் கொடுக்க கூடாது என புதிய உத்தரவை குமரி மாவட்ட காவல் துறை பிறப்பித்து அனைத்து பெட்ரோல் பங்கிலும் காவல் துறை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. டாஸ்மார்க்கில் மது வழங்க கூடாது, ஒட்டுனர் உரிமம் கிடையாது, என 18 வயதுக்கு உட்பட்வர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது . இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெட்ரோல் போட வாகனத்துடன் வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க கூடாது என புதிய உத்தரவை குமரி மாவட்ட காவல் துறை பிறப்பித்து உள்ளது . குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சகாசம் செய்தல், அதி வேகமாக சென்று விபத்துகள் ஏற்படுதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வாகனத்தை இயக்குபவர் ஏற்படுத்தும் விபத்தால் ஏற்படும் இழப்பு அவருடைய குடும்பத்திற்கும், அவரால் பாதிப்படைத்த குடும்பத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சம்பவங்களை தடுக்க புதுமையான முயற்சியை காவல்துறை மேற்கொண்டுள்ளது. ஒட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும் இரு சக்கர மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் பெட்ரோல் கொடுக்க கூடாது என அனைத்து பெட்ரோல் பல்கிலும் காவல் துறை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.