தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள் வெளியூர் செல்லும் சாலைகள், பாலங்கள் என போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது .அரசின் துரித நடவடிக்கையால் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை துறையின் மூலம் மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க சென்னையில் இருந்து வந்த சிறப்பு அதிகாரிகளான சபாஸ்டின், ப்ரிட்டோ ராஜ், ஆகியோர்ஆய்வு செய்தனர். உடன் கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், உதவி கோட்ட பொறியாளர் ரவி, உதவி பொறியாளர்ஜெயஜோதி , உதவிகோட்ட பொறியாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் திலீப்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் .



