திருப்பூர், நவ. 19 –
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாட்ராயன் கோவிலுக்கு கடந்த 14.01.2025 ஆம் தேதி மாலை சுமார் 06.00 மணியளவில் சாமி கும்பிடுவதற்காக வந்த பழனியம்மாள், க/பெ. பொன்னுச்சாமி, தேனி என்பவர் சாமி கும்பிட்டு விட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனது தெரியவந்ததையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதே போன்று கடந்த 24.09.25 ஆம் தேதி இரவு வெள்ளகோயில் வீரக்குமாரசாமி கோயிலில் படுத்து துங்கிக்கொண்டிருந்த மயிலாத்தாள்-57 க/பெ. கண்ணியப்பன் மதுக்கரை, கோவை என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க தாலிக்கொடியை யாரோ திருடி சென்றது தெரியவந்ததையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று 18.11.2025 ஆம் தேதி மதியம் வெள்ளகோயில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் காவலர்கள் முத்துக்கருப்பன், கார்த்தி, பெண் தலைமை காவலர் கல்பனா ஆகியோர் வெள்ளகோயில் – முத்தூர் ரோடு நாட்ராயன் கோயில் பிரிவு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த லட்சுமி (எ) செல்வி(60), க/பெ. பழனிச்சாமி, சென்னிமலை, பெருந்துறை என்பவரை விசாரிக்க அவர் மேற்படி நாட்ராயன் கோயில் மற்றும் வீரகுமாரசாமி கோயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களின் கழுத்திலிருந்து தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டு மணிபர்ஸில் இருந்த இரண்டு தங்க செயின்களை எடுத்துக்கொடுத்தவரை கைது செய்தும் அவரிடமிருந்து மேற்படி நகைகளை கைப்பற்றி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட கிளை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி லட்சுமி (எ) செல்வி என்பவர் மீது சேலம், விழுப்புரம், திருச்சி, திருப்பூர் மாவட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நகை திருட்டு வழக்குகள் உள்ளதும் மேற்படி லட்சுமி (எ) செல்வி என்பவர் திருடுவதையே தொழிலாக செய்து வந்ததும் குறிப்பிடதக்கது.


