நாகர்கோவில், நவ. 3 –
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் இவனாஸ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சகாயராணி. இவர்களுக்கு ஜோசா என்ற 4 வயது சிறுவன் உள்ளான். இச்சிறுவன் ஒரு நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் தந்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தை சந்தித்து தனது மகன் நடந்து செல்வதற்கு செயற்கை கால் கேட்டு மனு ஒன்றை அழித்து இருந்தார். அவரின் மனுவை வாங்கி படித்த விஜய் வசந்த் உடனடியாக அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் இல்லத்திற்கு இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று தனது சொந்த செலவில் செயற்கை கால் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சீனிவாசன்,
மருங்கூர் நகர காங்கிரஸ் தலைவர் சகாய ஹெலன், வட்டாரத் தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



