மார்த்தாண்டம், ஜூலை 15 –
மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே பாகோடை சேர்ந்த விஜயகுமார் மகன் சிஜின் (27). போட்டா பிரின்ட் எடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் ஞாறாம்விளையிலிருந்து குருவிக்காட்டுவிளை செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதி வேகமாக அஜாக்கிரதையாக வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே சிஜின் பலியானார்.
இதுகுறித்து அஜின் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் வென்டெலிகோட்டை சேர்ந்த மணிகண்டன் (50) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



