கோவை, ஜூன் 23 –
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றன.
அந்த வகையில் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் சி.டி.சி மேடு பேருந்து நிலையம் அருகில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
நிகழ்வை மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், பொள்ளாச்சி நகரச் செயலாளர் தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி தலைமையிலும் பொள்ளாச்சி வடமேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் அவர்கள் முன்னிலையில் ஆட்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகி முருகேசன் முத்துலட்சுமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஒன்றிய கழக செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்ட தொண்டரணி இணைச் செயலாளர் குமார், அரவிந்த் லீலா பிரகாஷ், கிளைச் செயலாளர் கிருபாகரன் ஆச்சிபட்டி நிர்வாகிகள் வெங்கடாசலம், சரஸ்வதி, அருள், ஹரிகரன், அபிநவ் சூர்யா, காளிதாஸ் போன்ற த.வெ.க. தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



